அடியே!
நீ
சமையற்குறிப்பு
நிகழ்ச்சியைத்தான்
தொகுத்து வழங்குகிறாய்...
நேயர் அனைவரும்
அழகுக்குறிப்பு எடுக்கிறார்கள் என்பது
உனக்கு
தெரியுமா
தெரியாதா???
******************************
******************************
அடியே!
இப்போதெல்லாம்
நீ
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு
இதழ் மறைக்கிறாயாமே...
அந்த
தேனியும்,
வண்ணத்துப்பூச்சியும்
புலம்புவது
மெய்யா???
******************************
******************************
அடியே!
நீ
ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
அம்மரம்
பூப்படைந்துவிட்டதாமே!!!
என்ன செய்தாய்???
******************************
******************************
அடியே!
மருதாணியிடச் சொல்லிவிட்டு
விரல் பிடித்ததுமே
சிவந்துபோனால் எப்படி???