Friday, April 16, 2010

அடியே!- சில கேள்விகள்....

அடியே!


நீ


சமையற்குறிப்பு


நிகழ்ச்சியைத்தான்


தொகுத்து வழங்குகிறாய்...


நேயர் அனைவரும்


அழகுக்குறிப்பு எடுக்கிறார்கள் என்பது


உனக்கு


தெரியுமா


தெரியாதா???






******************************


******************************






அடியே!


இப்போதெல்லாம்


நீ


உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு


இதழ் மறைக்கிறாயாமே...


அந்த


தேனியும்,


வண்ணத்துப்பூச்சியும்


புலம்புவது


மெய்யா???






******************************


******************************






அடியே!


நீ


ஊஞ்சல் கட்டி


ஆடியதும்


அம்மரம்


பூப்படைந்துவிட்டதாமே!!!


என்ன செய்தாய்???






******************************


******************************



அடியே!


மருதாணியிடச் சொல்லிவிட்டு


விரல் பிடித்ததுமே


சிவந்துபோனால் எப்படி???