Tuesday, June 1, 2010

கவிதைக் காரணங்கள்...

ஊடலின் வெப்பமும்
உள் விளைந்த
தனிமையின் மொத்தமும்
அன்றைய மழைக்காரணங்கள்...


வழக்கமாய்
ச்சோ! எனப் பெய்யும் மழை
அச்சச்சோ! எனப் பெய்வதாகவும்...


தழைகளினூடே
துளிகளைச் சிந்தி
தருக்கள் அழுவதாகவும்...


அதனினூடே
அவைகள்
அனுதாபிப்பதாகவும்
ஆறுதல் பட்டது மனது!!!


தேவ தேவி!
நின்
நினைப்பில் நனைவதைப்போலவே தொப்பலாய்
நனைந்துவிட்டேன் மழையிலும்...


குடைபிடித்து வானம் வருமா???
வரும்!!!
வந்தாய் நீ!!!


முற்றிலும் நனைந்த போதும்
இப்போது உன் குடை தேடியது மனது!!!


சூரியன் வருவதை
விரும்பாதிருக்காது வானம்...
ஏனோ
அம்முறை விரும்பவில்லை நீ!!!
ஆயினும்
வந்தே தீரும் சூரியன்!!!


குடைக்குள் நாம்!!!


அடுத்தடுத்த
உரசல்களில் உருவான
மின்சாரப் பாய்ச்சலில் நீயும்...
இதுவும்
ஊடல் விளைவிக்குமோ! என்ற
ஐயத்தில் நானும்...


பதைபதைத்துக்கொண்டே
பயணம் நீண்டது...


மகிழ்வுந்தோன்று தேரில் சேர் தெளித்ததும்
காற்று குடை கவர்ந்ததும்
மழை உன்னை திருமுழுக்கிட்டதும்
மின்னல் நம்மை பிணைத்திட்டதும்
உடனே ஊடல் விரட்டப்பட்டதும்
இக்கவிதை காரணங்கள்...




நன்றி யூத்புல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayaseelanpoem040610.asp