என் பின்னே சுற்றுவது ஏனென்று
இப்போதே கேட்டுவிடு...
தாமதிக்க தாமதிக்க
என்னிடம்
காரணங்கள் அதிகமாகிவிடக்கூடும்...
எதையேனும் சார்ந்திரு கவித்துவம் தத்துவம் காதல் இங்கிதம் சங்கீதமிப்படி எதன் மீதேனும் சாய்ந்திரு இல்லையேல் உலகம் காணாமல் போய்விடும் -வண்ணநிலவன்
Saturday, May 29, 2010
எறும்புகளிடம் சொல்லிவை!!!
எறும்புகளிடம் சொல்லிவை!
உன்
தாவணியோடு நிறுத்திக்கொள்ள...
மீறி
உன் திருமேனியில் ஊடுருவினால்
அது எல்லை தாண்டிய பயங்கரவாதம்...
போர் தொடுக்க நேரிடும்!!!
உன்
தாவணியோடு நிறுத்திக்கொள்ள...
மீறி
உன் திருமேனியில் ஊடுருவினால்
அது எல்லை தாண்டிய பயங்கரவாதம்...
போர் தொடுக்க நேரிடும்!!!
Sunday, May 23, 2010
Saturday, May 22, 2010
Thursday, May 20, 2010
புன்னகைசெய்யேன்...
நீ
உருட்டும் விழிகளைப் பார்த்து
ஒரு யுகத்திற்கான கவிகள் எதுதிமுடித்தாயிற்று
மாற்றம் தேவைபடுகிறது
ஒரேயொரு புன்னகைசெய்யேன்...
உருட்டும் விழிகளைப் பார்த்து
ஒரு யுகத்திற்கான கவிகள் எதுதிமுடித்தாயிற்று
மாற்றம் தேவைபடுகிறது
ஒரேயொரு புன்னகைசெய்யேன்...
Tuesday, May 18, 2010
பூந்தோட்டம்
என்னைவிடு!
பேருந்து கூட
கவிஎழுதிவிட்டது
உன்னைப்பற்றி...
நீ
வழக்கமாய் அமரும்
இருக்கைக்குமேல்
பூந்தோட்டம் எனும் ஊர்ப்பெயர்....
பேருந்து கூட
கவிஎழுதிவிட்டது
உன்னைப்பற்றி...
நீ
வழக்கமாய் அமரும்
இருக்கைக்குமேல்
பூந்தோட்டம் எனும் ஊர்ப்பெயர்....
Monday, May 10, 2010
அலுவலகம் போயாச்சு...
வெளிக்கதவுகளுக்குள்
வாலாட்டித் திரியும்
செல்ல நாய்க்குட்டி
உள்கதவுகளுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும்
சிறுவனுக்குத்
தந்த
உணர்வு
பொறாமையாகக்கூட இருக்கலாம்...
வாலாட்டித் திரியும்
செல்ல நாய்க்குட்டி
உள்கதவுகளுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும்
சிறுவனுக்குத்
தந்த
உணர்வு
பொறாமையாகக்கூட இருக்கலாம்...
Thursday, May 6, 2010
புரிதலின் பொருள்
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி....
என்னடா அர்த்தம்???
காதல்டா என்றான் நண்பன்...
புன்னகைத்துக்கொண்டே
பசி என்றான்
நிஜ பிச்சைக்காரன்...
Subscribe to:
Posts (Atom)