Tuesday, March 23, 2010

எப்படிச்சொல்வேன்....

சுற்றத்தாரின் தொடர்புகளையும்...
நண்பர்களின் நல விசாரிப்புகளையும்...
கடன் வாங்கிய விவரங்களையும்...
"வேலைக்கு ஆட்கள் தேவை'' பலகை மாட்டியிருக்கும்
கதவுகளின் முகவரிகளையும்...
என்னைப் போலவே
வேலை தேட
நாளை வரும் என் தம்பி,
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகும்
நான் வசிக்கும்
சென்னையின் சந்துகளை அறியாதவனாய்,
"நீயே வந்தெனை அழைத்துக்கொள்!" என்று
ஆயிரம் முறை
அனுப்பிய செய்திகளையும்...
சேமித்துவைத்திருந்த என் கைபேசியை
களவாடியவனிடம்
எப்படிச்சொல்வேன்-அது
இறந்துபோன என் அப்பா-எனக்கு
இறுதியாய் வாங்கிக்கொடுத்ததென்று!!!

4 comments:

சிவாஜி சங்கர் said...

:)

ரசிகன்! said...

hmmmmmmmm aazham podhindha arumaiyaana unarvu velippaadhu!!!

ஜெயசீலன் said...

unmai sambavam rasigan....

Unknown said...

machan cell ph kanama ponathuku ivaloooo feel panuriya da ne rompa nalavan da.....