*
குவலையம்
என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!....
நிஜங்களுக்கு முரணாய்
நித்திரைத் திரைவெளியில் நீ
கதவுகள் இன்றி வருவாய்...
கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்...
கனவுகளில் நீயோர் விழிவிழுங்கி!!!
விழுங்கி என்னை புழுங்கச் செய்வாய்...
புருவங்களை வில்களாக்குவாய்...
விழிக் கதிர்களின்
வீரியம் கூட்டிக் கூட்டி அம்புகள் செய்வாய்...
அம்புகளினுடே இறங்கி அகப்பூ அதிர ஆட்டமும் போடுவாய்....
இப்போது தண்டவாலங்களைவிட அதிகமாய் தடதடக்கும் இதயம்!!!!
கனவுகளில் நீயோர் மந்திர பிரம்மம்!
மந்தாட்சம் விளைவித்த மந்தமாருதம் ஊதி
பூவாசனுக்கு பூக்களின் நிறம் சிருஷ்டிப்பாய்...
புவனக்காதலரெல்லாம் தூது பரிமாற
புட்களுக்கெல்லாம் பேசுதிறன் கற்பிப்பாய்...
காதலில் மட்டும் எண்ண அலைகள் கட்டுக்குள் இருக்காது!
கனவுகளில் மட்டும் நிகழ்வதேதும் தொடர்ச்சியாய் இருக்காது!!!
கைகோர்த்து நடப்பாய்...
அடுத்தநொடியில் இதழ்கள் சேர்த்து மெல்லக் காதலைக் கடப்பாய்...
அற்புதங்கள் நிகழ்த்திவிட்டு என் நித்திரையையும் துரத்திவிடுவாய்...
விடிகையில் அல்லது விழிக்கையில்
இதயம் துடிக்கும் இவ்வாறு என் கண்மணி!
"மீளா துயிலிலும்
உன் கனவு வருமெனில்
இப்போதே நான் தயார்"!!!...
நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008075&format=html
16 comments:
கவிதை அருமை நண்பரே.. இப்பொழுது கனவுகள் காண உடலின் உயிரும் வேண்டும்... :)
nice one jayaseelan ....It seems to be grammatical too....good job...
அற்புதம். தங்களின் கவி மிக அருமை நண்பரே!
கவிதை அருமை ஜெயா...
நண்பரே நலமா?
உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.. நேரம் இருப்பின் எழுதுங்கள்..
kavithai padithavarhal kanavu kaana asai paduvarhal...mihavum arumai...thavaraha ninaikka vendom,athil "kaikorthu adutha nodiyil"ennum variyil"NODIYIL" pizhai ullathu.sari parkkavum....
@வினோ
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
@ஷம்மி
நன்றி தோழி..... க்ராமரா அப்டின்னா என்னன்னே தெரியாது ஷம்மி...
@கபிலன்
நன்றி சார்...
@சிவா
நன்றி தமிழாசிரியரே....
@பாரதி
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
@வந்தவர்கள்
வருகைக்கும் நேரம் ஒதுக்கி படித்தமைக்கும் நன்றி...
hai sir, your kavathi is superb
kavidhai super......... but kuvalayam means what?....
/dsp said...
kavidhai super......... but kuvalayam means what?..../
நன்றி DSP.....
குவலயம்ன்னா உலகம்ன்னு அர்த்தம்....
இனிது இனிது காதல் இனிது..அதனினும் இனிது தங்கள் கவிதை...
நன்றி ஷஹி
வாத்தியாரே கவிதை சூப்பர்....
மிக அருமையான கவிதை... ஜெயா..எங்கியோ போகிற மாதிரி தெரியுது....ம்ம்ம்ம் நடக்கட்டும்.
# காதலில் மட்டும் எண்ண அலைகள் கட்டுக்குள் இருக்காது!
கனவுகளில் மட்டும் நிகழ்வதேதும் தொடர்ச்சியாய் இருக்காது!!!
அற்புதம். உண்மை.
நல்லா இருக்கு.
kavithaigal yaluthaum
kavi thuvam alinthu kondu varukirathu
Post a Comment